/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனையில் டயக்னாஸ்டிக் மையம் திறப்பு விழா
/
கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனையில் டயக்னாஸ்டிக் மையம் திறப்பு விழா
கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனையில் டயக்னாஸ்டிக் மையம் திறப்பு விழா
கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனையில் டயக்னாஸ்டிக் மையம் திறப்பு விழா
ADDED : டிச 30, 2024 02:34 AM
ஈரோடு,: ஈரோடு கே.எம்.சி.ஹெச்., ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், அதிநவீன வசதிகளுடன் டயக்னாஸ்டிக் மையம் அமைக்கப்பட்-டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
மருத்துவமனை தலைவரும், நிர்வாக இயக்குனருமான டாக்டர் நல்லா ஜி பழனி-சாமி தலைமை தாங்கினார். துணை தலைவர் டாக்டர் தவமணி தேவி பழனிசாமி, செயல் இயக்குனர் அருண் பழனிசாமி முன்-னிலை வகிதத்னர். அமைச்சர் முத்துசாமி டயக்னாஸ்டிக் மையத்தை திறந்து வைத்தார். விழாவில் ஈரோடு எம்.பி., பிரகாஷ், மேயர் நாகரத்தினம், ஒன்றிய செயலாளர் சாமி மற்றும் மருத்துவர்கள், மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்-டனர். இதுகுறித்து மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி கூறியதாவது: அதிநவீன வசதியுடன் கூடிய டயக்-னாஸ்டிக் மையம், உலகத்தரமான மருத்துவ சேவைகளை அளித்-திட உறுதுணையாக விளங்கும். அனைத்து வித பரிசோதனைகள் மேற்கொள்ளும் வகையில் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் தேவையில்லாத பரிசோதனைகளை செய்ய நிர்பந்தம் செய்வதில்லை. சென்னை, டெல்லி உள்ளிட்ட பெரு நகரங்களில் கிடைக்கும் அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் கொங்கு மண்ட-லத்தில் கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்-படும். இவ்வாறு அவர் கூறினார்.

