/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தோடு தராத மனைவி கணவன் விபரீத முடிவு
/
தோடு தராத மனைவி கணவன் விபரீத முடிவு
ADDED : ஏப் 06, 2024 02:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு,
சூளை, ஈ.பி.பி.நகர், சக்தி மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர்
இளங்கோ, 26; இவரின் காதல் மனைவி அபிசா. இளங்கோ குடிபோதைக்கு
அடிமையானார். இதனால் அபிசாவின் ஒரு தோட்டை வாங்கி, 3ம் தேதி அடமானம்
வைத்தார். மறுநாள் மீண்டும் மற்றொரு தோட்டை கேட்டுள்ளார்.
அபிசா
மறுக்கவே வீட்டுக்குள் சென்று இளங்கோ கதவை தாழிட்டு கொண்டார். அக்கம்
பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, இளங்கோ
சேலையால் துாக்கு போட்டிருந்தார். அவரை மீட்டு ஈரோடு அரசு
மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள்,
ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

