ADDED : ஜூன் 23, 2026 01:17 AM
அ நிறம் | அளவு
பவானி; பவானி அருகே தளவாய்பேட்டை, மாதேஸ்வ-ரன்மலை கோவில் வீதியை சேர்ந்த தொழிலாளி முருகேசன், 56; தென்னங்கீற்று கொண்டு வேயப்-பட்ட குடிசை வீட்டில் வசிக்கிறார்.
நேற்று முன்-தினம் இரவு வீட்டு வெளியே அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது குடிசை வீடு தீப்பி-டித்து எரிந்தது. தகவலின்படி சென்ற பவானி தீய-ணைப்பு நிலைய வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சாம்பலானது. விபத்-துக்கான காரணம் குறித்து பவானி போலீசார் விசாரிக்கின்றனர்.
