ADDED : ஏப் 07, 2025 02:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம், கமலா நகரில் கருப்பையா என்பவ-ருக்கு சொந்தமான பழைய பேப்பர் குடோன் உள்ளது. இங்கு பழைய பேப்பர் மட்டுமின்றி பயன்பாடற்ற மொபைல் போன், சிறிய பேட்டரிகள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை சேக-ரித்து வைத்து வியாபாரம் செய்கிறார். நேற்று மதியம் குடோனில் இருந்து அதிகளவில் கரும்புகை வந்தது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சென்றனர்.
மூன்றரை மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்-தனர். மின் கசிவால் விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. தீயில் பழைய பேப்பர், பேட்டரி, மொபைல் போன் உள்ளிட்டவை வெடித்து சிதறி நாசமாகின. சேத மதிப்பு தெரியவில்லை.

