/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பராமரிப்பு பணியால் கதவணையில் மின்னுற்பத்தி நிறுத்தம்
/
பராமரிப்பு பணியால் கதவணையில் மின்னுற்பத்தி நிறுத்தம்
பராமரிப்பு பணியால் கதவணையில் மின்னுற்பத்தி நிறுத்தம்
பராமரிப்பு பணியால் கதவணையில் மின்னுற்பத்தி நிறுத்தம்
ADDED : பிப் 17, 2025 02:38 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே ஏழு இடங்-களில் கதவணை அமைக்கப்பட்டு, நீர் மின் நிலையங்கள் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
இதில் ஈரோடு வெண்டி பாளையம் கதவணை நவீனமானது. 18 மதகு கொண்ட கதவணையில், 30 மெகாவாட் மின்சாரம் உற்-பத்தி செய்யப்படுகிறது. காவிரி ஆற்றில், 2,500 கன அடி நீருக்கு மேல் வந்தால் மட்டுமே மின்னுற்பத்தி நடக்கும்.வெண்டிபா-ளையம் கதவணையில் ஆண்டு பராமரிப்பு பணி வரும், 19ல் தொடங்கி, மார்ச், 5ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக இன்று முதல் மின்னுற்பத்தி நடக்கும் இடத்தில் தேக்கி வைக்கப்பட்-டுள்ள தண்ணீர் வெளியேற்றப்பட்டு, பராமரிப்பு ஆயத்த பணி நடக்க உள்ளது. இதனால் மின்னுற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது காவிரி ஆற்றில் குடிநீருக்காக மட்டுமே 500 கனஅடி நீர் திறக்கப்-பட்டுள்ள நிலையில் ஆற்றின் பெரும்பாலான பகுதிகள் வறண்டு பாறைகளாக காட்சியளிக்கின்றன.