sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

எதிர்ப்பை மீறி ஸ்டாண்டில் வாகனத்தை நிறுத்துவதாக உரிமையாளர் மீது புகார்

/

எதிர்ப்பை மீறி ஸ்டாண்டில் வாகனத்தை நிறுத்துவதாக உரிமையாளர் மீது புகார்

எதிர்ப்பை மீறி ஸ்டாண்டில் வாகனத்தை நிறுத்துவதாக உரிமையாளர் மீது புகார்

எதிர்ப்பை மீறி ஸ்டாண்டில் வாகனத்தை நிறுத்துவதாக உரிமையாளர் மீது புகார்


ADDED : ஆக 05, 2025 01:30 AM

Google News

ADDED : ஆக 05, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க பொது செயலாளர் கனகராஜ் தலைமையிலான ஆட்டோ டிரைவர்கள், ஈரோடு கலெக்டர் கந்தசாமியிடம் நேற்று அளித்த மனு:

ஈரோடு மாநகர் பூந்துறை சாலை அண்ணமார் பெட்ரோல் பங்க் எதிரே வாய்க்காலை ஒட்டிய பகுதியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் ஒன்பது பேர் மினி லாரி (டெம்போ) வைத்து தொழில் செய்கின்றனர். இவர்களால் போக்குவரத்துக்கு இடையூறு இல்லை.

கடந்த ஜூலையில் அசோக்குமார் என்பவர் சிறிய ரக சரக்கு வாகனத்தை (சிறிய நான்கு சக்கர வாகனம்) எங்கள் ஸ்டாண்டில் கொண்டு வந்து நிறுத்தினார்.

இங்கு நிறுத்த கூடாது. எங்கள் தொழில் பாதிக்கும். சிறிது துாரம் தள்ளி நிறுத்துங்கள் என கூறினோம். நான் இதே பகுதியை சேர்ந்தவன். இங்கு தான் நிறுத்துவேன் என்று கூறி மறுத்து விட்டார்.இப்பிரச்னை குறித்து தாலுகா இன்ஸ்பெக்டர் விசாரித்தார். ஆனாலும் இதுவரை தீர்வு ஏற்படவில்லை. அசோக்குமார் தொடர்ந்து எங்கள் ஸ்டாண்டிலேயே வாகனத்தை நிறுத்துகிறார். இவ்விவகாரத்தில் உரிய தீர்வு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us