/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மத்திய அரசு ஊழியர்கள் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்
/
மத்திய அரசு ஊழியர்கள் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 17, 2025 07:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும். 2026க்கு முன் பணியாற்றி ஓய்வு பெறுவோருக்கும், ஓய்வூதியத்தை மாற்றி அமைக்க வேண்டும். முடக்கப்பட்ட, 18 சதவீத பஞ்சப்படியை திரும்ப வழங்க வேண்டும். வாரிசுகளுக்கு வேலை கொடுப்-பதில், 5 சதவீதம் என்ற உச்ச வரம்பை நீக்க வேண்டும், என வலியுறுத்தி, மத்திய அரசு ஊழியர் ஒருங்கிணைப்பு குழு சார்பில், மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது.
இதன்படி வருமான வரித்துறை அலுவலகம் முன் நடந்த ஆர்ப்-பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் மணிகண்டன் தலைமை வகித்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி, தலைமை தபால் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

