ADDED : ஆக 23, 2024 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, திண்டல் வேலாயுதசாமி கோவிலில், 3 கோடி ரூபாய் மதிப்பில் ராஜகோபுரம் அமைக்கும் பணி, 2 கோடி ரூபாய் மதிப்பில் புதியதாக சிவன் சன்னதி, அம்மன் சன்னதி மற்றும் பரி-வார சன்னதி கட்ட முடிவு செய்யப்பட்டது. இதன்படி ராஜகோ-புரம் அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
இந்நி-லையில் சிவன் சன்னதி, அம்மன் சன்னதி மற்றும் பரிவார சன்ன-திகள் கட்டுவதற்கான கால்கோள் விழா, ராஜகோபுரத்துக்கு நிலைக்கால் வைக்கும் விழா நேற்று நடந்தது. இதில் அமைச்சர் முத்துசாமி, பிரகாஷ் எம்.பி, கோவில் செயல் அலுவலர் சுகுமார், மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் சிவ-குமார், வேலாயுதசுவாமி கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேலுச்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

