sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கொதிகலன் குழாய் பழுது மின் உற்பத்தி நிறுத்தம்

/

கொதிகலன் குழாய் பழுது மின் உற்பத்தி நிறுத்தம்

கொதிகலன் குழாய் பழுது மின் உற்பத்தி நிறுத்தம்

கொதிகலன் குழாய் பழுது மின் உற்பத்தி நிறுத்தம்


ADDED : அக் 17, 2024 03:10 AM

Google News

ADDED : அக் 17, 2024 03:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: கொதிகலன் குழாய் பழுதால் மேட்டூர், 600 மெகாவாட் அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

மேட்டூர் புதிய அனல்மின் நிலையத்தில் ஒரே அலகில், 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டது. இதனால், 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பழுது பார்க்கும் பணி நடக்கிறது. பணிகள் முடிந்து மீண்டும் மின் உற்-பத்தி துவங்கும்.

அதுபோல ஒரு அலகில், 210 வீதம், 4 அலகில், 840 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் பழைய மின் நிலையத்தில் கடந்த, 12ல், 1 மற்றும், 4வது அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. மீண்டும் நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு, 1வது அலகில் மின் உற்பத்தி துவங்கியது. தற்போது மேட்டூர் பழைய அனல்மின் நிலையத்தில், 1,2,3 ஆகிய மூன்று அலகில் மட்டும் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், 4வது அலகில், 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மின் தேவையை பொறுத்து மீண்டும் உற்பத்தி துவங்கப்படும்.






      Dinamalar
      Follow us