/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோழிப்பண்ணை விவகாரம் 3ம் கட்ட பேச்சில் உடன்பாடு
/
கோழிப்பண்ணை விவகாரம் 3ம் கட்ட பேச்சில் உடன்பாடு
ADDED : டிச 14, 2024 03:10 AM
தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த குண்டடம், கருப்பட்டி பாளையத்தில் கோழிப்பண்ணை இயங்கி வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசுபட்டு, விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் மக்கள் போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் இருகட்ட
பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்பட-வில்லை.இந்நிலையில் தாராபுரம் தாசில்தார் திரவியம் முன்னிலையில் மூன்றாம் கட்டமாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இதில் கோழிப்பண்ணையில் சுகாதாரம் சார்ந்த நடவடிக்கை-களை மேம்படுத்துதல், கூடுதல் கட்டடம் கட்டப்படக் கூடாது. தற்போதைய எண்ணிக்கைக்கு மேல், கோழிகளை வளர்க்கக்கூ-டாது உள்ளிட்ட நிபந்தனைகளை இருதரப்பினரும் ஏற்றுக் கொண்டனர். இதனால் கூட்டம் சுமுகமாக நிறைவடைந்தது. கூட்-டத்தில் விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஈஸ்வரன், கோழிப்பண்ணை விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ஈஸ்வர-மூர்த்தி, கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

