/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
75 டன் காய்கறி, பழங்கள் உ.சந்தைகளில் விற்பனை
/
75 டன் காய்கறி, பழங்கள் உ.சந்தைகளில் விற்பனை
ADDED : டிச 23, 2024 09:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், ஈரோடு பெரியார் நகர், தாளவாடி, கோபி, சத்தி, பெருந்துறையில் உழவர் சந்தை செயல்படுகிறது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று சம்பத் நகர் உழவர் சந்தைக்கு, 31.33 டன் காய்கறி, பழம் வரத்தாகி விற்றது.
இதன் மதிப்பு, 12.௦௯ லட்சம் ரூபாய். மொத்தம் ஆறு உழவர் சந்தைகளிலும், 75 டன் காய்கறி, பழம் விற்றது. இதன் மதிப்பு, 29.18 லட்சம் ரூபாய். உழவர் சந்தைகளுக்கு, 11,213 வாடிக்கையாளர் வந்தனர்.

