/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மக்கள் பயன்பாட்டுக்கு வந்த 5 அரசு பஸ்கள்
/
மக்கள் பயன்பாட்டுக்கு வந்த 5 அரசு பஸ்கள்
ADDED : செப் 13, 2024 06:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: அரசு போக்குவர்தது கழகம் சார்பில், ஈரோட்டில் இருந்து, ஈரோடு-கோவை வழியே இரண்டு பஸ்கள், கோவை-சேலம் இடையே இரண்டு பஸ்கள், கோவை-மைசூரு இடையே ஒரு பஸ் என, ஐந்து பஸ்கள் இயக்கத்தை, அமைச்சர் முத்துசாமி நேற்று தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் எம்.பி. பிரகாஷ், மேயர் நாகரத்தினம், அரசு போக்குவரத்து கோவை மேலாண் இயக்குனர் ஜோசப் டயஸ், பொது மேலாளர் மோகன் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

