ADDED : ஜூலை 29, 2024 01:17 AM
ஈரோடு: ஈரோடு ஸ்டோனி பாலம், கருங்கல்பாளையம் காவிரி சாலையில் மீன் மார்க்கெட் செயல்படுகிறது. இங்கு துாத்துக்குடி, நாகை, ராமேசுவரம் உள்ளிட்ட இடங்களில் இருந்தும், கேரள மாநி-லத்தில் இருந்தும் மீன்கள் கொண்டு வரப்படுகின்றன. மார்க்-கெட்டில் நேற்று வரத்து குறைவாக காணப்பட்டது. இதனால் விலை உயர்ந்தது.
இதுகுறித்து மீன் வியாபாரி ஒருவர் கூறியதாவது:- ஈரோட்டுக்கு துாத்துக்குடியில் இருந்து அதிகமாக மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. அங்கு மாதா கோவில் திருவிழா கொடி-யேற்றப்பட்டதால், மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் அங்கிருந்து மீன் வரவில்லை. மற்ற பகுதிகளில் இருந்து வந்தன. வழக்கமாக, 6 டன் மீன் வரும். இந்த வாரம், 3.5 டன் மட்டுமே வரத்தானதால், விலை சற்று அதிகரித்தது. இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று விற்பனையான மீன்களின் விலை விபரம் (கிலோ-ரூ-பாயில்): வஞ்சிரம்--1,200, வெள்ளை வாவல்-1,000, கருப்பு வாவல்-800, விளமீன்-600, தேங்காய் பாறை-600, மஞ்சள் பாறை-550, இறால்-600, மத்தி-300, நெத்திலி-350, சங்-கரா-400, நகர மீன்-500, அயிலை-350, ஊளி-600. ஒரு கிலோ நண்டு, 450 ரூபாய்-க்கு விற்றது. அணை மீன்களான லோகு, கட்லா கிலோ, 180 ரூபாய், பாறை, 170, நெய், ஜிலேபி மீன் தலா, 150 ரூபாய்-க்கும் விற்றது.

