sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கச்சேரி, ஒலிபெருக்கிக்கு தடை

/

கச்சேரி, ஒலிபெருக்கிக்கு தடை

கச்சேரி, ஒலிபெருக்கிக்கு தடை

கச்சேரி, ஒலிபெருக்கிக்கு தடை


ADDED : ஏப் 17, 2024 11:53 AM

Google News

ADDED : ஏப் 17, 2024 11:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தேர்தலுக்கு முந்தைய, 72 மணி நேரம் மற்றும், 48 மணி நேரத்துக்குள் வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறை குறித்த கூட்டம், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் ஈரோட்டில் நேற்று நடந்தது.

இதில் கலெக்டர் பேசியதாவது: தேர்தலுக்கு முந்தைய, 48 மணி நேரத்துக்குள் ஒலிபெருக்கிகள் தடை செய்யப்படுகிறது. தொகுதிக்கு தொடர்பில்லாத நபர்கள் நடமாட்டம், தங்கும் விடுதிகள், சமுதாய கூடங்களில் தங்குதல், கூட்டம் கூடுதல், அதிகமாக எஸ்.எம்.எஸ்., அனுப்புதல் தடை விதிக்கப்படுகிறது. மண்டபங்கள், தங்கும் விடுதிகள், சந்தேகப்படும் இடங்களில் தணிக்கை செய்யப்படும். மேடை நாடகங்கள், கச்சேரி, கலை நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. பிற மாவட்டத்தினர் தங்க அனுமதி இல்லை.

ஓட்டுப்பதிவு நாளில், ஓட்டுச்சாவடி அமைவிடத்தில் இருந்து, 200 மீட்டருக்கு அப்பால் அரசியல் கட்சியினர் தற்காலிக பூத் அமைக்கலாம். அதற்கும், வேட்பாளர்கள் வாகனங்களுக்கும் அனுமதி பெற வேண்டும். தேர்தல் குறித்த புகாரை, கட்டுப்பாட்டு அறைக்கு, 1800 425 0424, தொலைபேசி எண்: 0424 2267672, 2267675, சி-விஜில் ஆப் மூலமும் தெரிவிக்கலாம். இவ்வாறு பேசினார்.

கூட்டத்தில் எஸ்.பி., ஜவகர், டி.ஆர்.ஓ., சாந்தகுமார், அதிகாரிகள் ரகுநாதன், சிவசங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us