/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
முளைப்பு திறன் குறைந்த விதை விற்றால் நடவடிக்கை
/
முளைப்பு திறன் குறைந்த விதை விற்றால் நடவடிக்கை
ADDED : செப் 05, 2024 03:20 AM
ஈரோடு: ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் சுமதி, வெளியிட்ட அறிக்கை: ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் உரிமம் பெற்ற விதை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள், முளைப்பு திறன் பரிசோதனை முடிவுகள் பெறப்பட்ட பின்னரே, விவசாயிகளுக்கு விதை வினியோகம் செய்ய வேண்டும்.
விதை விற்பனை செய்-யும்போது, உரிய விற்பனை ரசீதில் விவசாயிகளின் பெயர், முக-வரி, அலைபேசி எண் குறிப்பிட்டு, விவசாயி கையொப்பம் பெற்று, ரசீது வழங்க வேண்டும்.உண்மை நிலை விதைகளை வினியோகஸ்தர்கள், சில்லறை விற்-பனையாளர்களுக்கு அனுப்பும் போது விதை குவியலுக்குரிய பகுப்பாய்வு முடிவு அறிக்கை நகலுடன் அனுப்ப வேண்டும். விதை விற்பனையாளர்கள், பகுப்பாய்வு முடிவு அறிக்கை பெறப்-படாத நிலையில், அந்த விதை குவியலில் இருந்து பணி விதை மாதிரிகள் எடுத்து, அதை விதை பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பி வைத்து, பகுப்பாய்வு முடிவுகள் பெற்ற பின்னரே உண்மை நிலை விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும்.
பகுப்பாய்வு முடிவுகள் விரைவில் தேவைப்படும் பட்சத்தில், முன்னுரிமை முறையில் ஆய்வுக்கு அனுப்பி பெற்று கொள்ள வேண்டும். விபர அட்டையில், 14 விபரங்களுடன் உள்ள உண்மை நிலை விதைகளின் உண்மை நிலை அட்டையை, சிப்-பங்களில் பொருத்தி இருக்க வேண்டும். விதிகளை மீறுவோர் மீது, விதை சட்டம், விதை விதிகள், விதை கட்டுப்பாடு ஆணைப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு எச்ச-ரித்துள்ளார்.

