/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அந்தியூரில் 5.46 லட்சத்திற்கு விளை பொருள் விற்பனை
/
அந்தியூரில் 5.46 லட்சத்திற்கு விளை பொருள் விற்பனை
ADDED : ஏப் 24, 2024 02:23 AM
அந்தியூர், அந்தியூர், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 4,000 தேங்காய்கள் வரத்தாகி, கிலோ, 20.21 - 29.11 ரூபாய் என, 41 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது.
தேங்காய் பருப்பு, 96 மூட்டைகள் வரத்தாகி, கிலோ, 82.39-96.09 ரூபாய் என, 3.26 லட்சம் ரூபாய்க்கு விற்றது. எள், 16 மூட்டை வரத்தாகி, கிலோ, 132.19-143.39 ரூபாய் என, 1.15 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
ஆமணக்கு, 8 மூட்டை வரத்தாகி, 26 ஆயிரத்திற்கு விற்றது. கொள்ளு, இரண்டு மூட்டை வரத்தாகி, 8,000 ரூபாய்க்கு விற்றது. மக்காச்சோளம், 8 மூட்டை வரத்தாகி, 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது.
துவரை (மட்டம்) இரண்டு மூட்டை வரத்தாகி, 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. மொத்தம், 5.46 லட்சம் ரூபாய்க்கு வேளாண்விளை பொருட்கள் விற்றதாக விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.

