நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நவராத்திரி விழா
தாராபுரம், அக். 4-
நவராத்திரி பண்டிகையை ஒட்டி, தாராபுரம் புதுக்காவல் நிலைய வீதி துர்க்கை அம்மன் கோவிலில், நேற்று விசேஷ பூஜை நடந்தது. இதேபோல் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் மடத்தில் நேற்று துவங்கிய நவராத்திரி விழாவில், ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை, திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

