/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
செட் அமைக்கும் போது தவறி விழுந்தவர் சாவு
/
செட் அமைக்கும் போது தவறி விழுந்தவர் சாவு
ADDED : செப் 16, 2024 03:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: ஊதியூர் அருகே, தேங்காய் களத்தில், செட் அமைக்கும் போது தவறி விழுந்த தொழிலாளி இறந்தார்.
காங்கேயத்தை சேர்ந்த கூலி தொழிலாளி மணி, 55; ஊதியூர் அருகே குள்ளம்பாளையத்தில், தேங்காய் களத்தில் செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். 20 அடி உயரத்தில் சீட் மாற்றிக் கொண்டிருந்தபோது தவறி விழுந்தார். காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். டாக்டர் பரிசோதனையில் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டது தெரிந்தது. புகாரின்படி ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

