/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அறிவித்த ஆர்ப்பாட்டம் ரத்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு
/
அறிவித்த ஆர்ப்பாட்டம் ரத்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு
அறிவித்த ஆர்ப்பாட்டம் ரத்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு
அறிவித்த ஆர்ப்பாட்டம் ரத்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு
ADDED : செப் 11, 2024 04:16 AM
பவானி: பவானி அடுத்த ஒலகடம் பேரூராட்சி, 10வது வார்டில், 51 வீடுக-ளுக்கு பட்டா கோரி, கலெக்டர் உட்பட பல்வேறு அதிகாரிக-ளுக்கு, அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஒரு மாதத்துக்கு முன் கோரிக்கையை முன்வைத்து, ஒல-கடத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டும், மேல் நடவ-டிக்கை இல்லை. இதனால் வி.சி., தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் வெங்கடேஸ்வரன் தலைமையில், பவானி தாலுகா அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்-கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தை கைவிடக் கூறிய வருவாய் துறையினர், வி.சி.,க்கள் மற்றும் மக்களை அழைத்தனர். பவானி தாலுகா அலு-வலகத்தில், தாசில்தார் சித்ரா தலைமையில் பேச்சுவார்த்தை நடந்-தது. இதில், 51 குடும்பத்தினருக்கு
பட்டா வழங்க மக்கள் வலியு-றுத்தினர். மாவட்ட நிர்வாகத்திடம் பேசிய தாசில்தார், 20 நாட்க-ளுக்குள் பட்டா பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்-கவே, ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.

