/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அழிக்கப்படும் பாரம்பரிய நீர்நிலைகள்... இப்படியே சென்றால் எப்படி? நிலை மாறாமல் பாதுகாப்பது அவசியம்
/
அழிக்கப்படும் பாரம்பரிய நீர்நிலைகள்... இப்படியே சென்றால் எப்படி? நிலை மாறாமல் பாதுகாப்பது அவசியம்
அழிக்கப்படும் பாரம்பரிய நீர்நிலைகள்... இப்படியே சென்றால் எப்படி? நிலை மாறாமல் பாதுகாப்பது அவசியம்
அழிக்கப்படும் பாரம்பரிய நீர்நிலைகள்... இப்படியே சென்றால் எப்படி? நிலை மாறாமல் பாதுகாப்பது அவசியம்
ADDED : நவ 28, 2025 07:44 AM

நமது முந்தைய தலைமுறையினர் பல நுாறு ஆண்டுகளுக்கு முன்னர் பல கால கட்டங்களில் கடும் பஞ்சங்களை சந்தித்தனர். பஞ்சத்தில் இருந்து பாதுகாப்பு பெற மழை நீர் சேகரிப்பு அவசியம் என்பதை உணர்ந்து ஆங்காங்கே ஊருணிகள், குளங்கள், கண்மாய்கள், ஏரிகளை உருவாக்கினர். சமீப ஆண்டுகளில் 2003, 2017ல் கூட கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு தென்னை மரங்கள் காய்ந்து விவசாயிகள் கடும் பாதிப்படைந்தனர். அவர்களுக்கு அரசு சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது. வறட்சி பாதிப்பை உணர்ந்து நிலத்தடி நீர் மட்டம் மேம்பட அனைத்து கட்டடங்களிலும் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அரசு கட்டாயமாக்கியுள்ளது.
இந்நிலையில் சமீப ஆண்டுகளில் வளர்ந்து வரும் ரியல் எஸ்டேட் தொழிலால் நிலத்தை மதிப்பு பல மடங்கு அதிகரித்து வருகிறது. இதனால் விளை நிலத்தில் இருந்து கிடைக்கும் விவசாய வருமானத்தை காட்டிலும், ரியல் எஸ்டேட்காரர்களிடம் விற்பது அதிக லாபம் என்ற மனோபாவம் உருவாகியுள்ளது.
இவ்வற்றில் நிலத்தடி பெருக வேண்டி அமைக்கப்பட்டிருந்த தனியார் குளங்களும் தப்பவில்லை. சென்னையில் கடந்த 50 ஆண்டுகளில் இதுபோல குளங்கள் மறைந்ததால் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்க வழியின்றி இன்று பெரும் தவிப்பிற்கு ஆளாகியிருப்பது ஒரு எடுத்துக்காட்டு.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் பல ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதி தந்து வந்த சில தனியார் குளங்கள் மண் நிரவி வீட்டு மனைகளாக மாற்றப்படும் அவலம் நடக்கிறது. குளங்கள் மூடப்படுவதால் கிடைக்கும் மழை நீரை சேகரிக்க வழியின்றி அப்பகுதிகளில் நிலத்தடி நீர் வெகுவாக பாதிப்படையும். அதிக நீர் வரத்து காலங்களில் அங்கு கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. நீர் பிடிப்பு பகுதிகள் தனியாருக்கு சொந்தமாக இருந்தாலும் அதை வேறு உபயோகத்திற்காக மாற்றம் செய்யக்கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றி குளங்களை பாதுகாக்க அரசு கண்டிப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

