/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை'யில் குவிந்த சுற்றுலா பயணிகள்
/
'கொடை'யில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ADDED : செப் 29, 2024 11:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வார விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, கோக்கர்ஸ்வாக், மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், வனச்சுற்றுலா தலங்களை பயணிகள் ரசித்தனர்.
ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள் சவாரி, ஏரியில் படகு சவாரி செய்து பயணிகள் மகிழ்ந்தனர். மாலையில் லேசான சாரல் மழை பெய்தது.

