/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நடுரோட்டில் எரிந்த கார் பயணித்த மூவர் தப்பினர்
/
நடுரோட்டில் எரிந்த கார் பயணித்த மூவர் தப்பினர்
ADDED : நவ 24, 2024 02:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளிமந்தையம்:கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் மணியன், 52. இவரது மனைவி மாலதி, 46, தாய் ஜானகி, 72, ஆகியோருடன் மதுரையில் உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்காக, நேற்று காலை 5:45 மணிக்கு, 'ரொனால்ட் டஸ்டர்' காரில் மதுரைக்கு சென்று கொண்டிருந்தனர்.
தாராபுரம் - ஒட்டன்சத்திரம் ரோட்டில் அப்பியம்பட்டி பிரிவு அருகே, 7:30 மணிக்கு காரின் முன்பகுதியில் இருந்து புகை கிளம்பியது.
இதைப் பார்த்து உடனடியாக மூவரும் கீழே இறங்கினர். அடுத்த சில வினாடிகளில் கார் முற்றிலும் தீப்பற்றி எரிந்தது. தாராபுரம் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
கள்ளிமந்தையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

