sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அதிகரிக்கும் பண்டிகை சீட்டு மோசடி தடுக்க வழி காணலாமே: மக்களிடம் அவசியம் விழிப்புணர்வு

/

அதிகரிக்கும் பண்டிகை சீட்டு மோசடி தடுக்க வழி காணலாமே: மக்களிடம் அவசியம் விழிப்புணர்வு

அதிகரிக்கும் பண்டிகை சீட்டு மோசடி தடுக்க வழி காணலாமே: மக்களிடம் அவசியம் விழிப்புணர்வு

அதிகரிக்கும் பண்டிகை சீட்டு மோசடி தடுக்க வழி காணலாமே: மக்களிடம் அவசியம் விழிப்புணர்வு


ADDED : அக் 25, 2024 07:27 AM

Google News

ADDED : அக் 25, 2024 07:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தில் கிராமங்கள் முதல் நகர்ப்புறங்கள் வரை தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில் பண்டிகை சீட்டுகளில் சேர்ந்து ஏமாற்றம் அடைந்ததாக ஏராளமான புகார்கள் வருகிறது. குறிப்பாக பெண்கள் தீபாவளி பண்டிகை நேரங்களில் குடும்ப உறுப்பினர்களுக்கு புது துணிமணிகள், நகைகள் எடுப்பது ,பண்டிகை செலவுகளுக்கு என குறிப்பிட்ட தொகையை ஆண்டு முழுவதும் சேமித்து வைத்து அதை பண்டிகை நேரங்களில் பயன்படுத்துவது வழக்கம்.

இதை பயன்படுத்தி சிட் பண்ட், ஏலச்சீட்டு, தீபாவளி நகை சீட்டு, சேமிப்பு சீட்டு, ஜவுளி கடைகள் , வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகளும் புதிய புதிய சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்கின்றனர். இதில் பலர் எந்த விதமான பதிவுகளும் செய்யாமலும் வாங்கிய பணத்திற்கு ரசீதுகள் கொடுக்காமலும் வாய்மொழி உத்தரவாதங்களை கவர்ச்சியாக கொடுத்து ,கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகின்றனர். இதுபோன்று போலி நபர்கள், நிறுவனங்களிடம் ஏமாறும் நபர்கள் போலீசில் புகார் கூட செய்ய முடியாத நிலையில் புலம்பி வருகின்றனர். மக்கள் தங்களது சேமிப்பை தொடங்கும் போது பதிவு செய்யாத தனிநபர் சிட் பண்ட்களை தவிர்க்க வேண்டும். வெளிப்படை தன்மையுடன் சட்ட விதிமுறைகளைப் பின்பற்றும் நிறுவனங்களை தேர்வு செய்து விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். மேலும் இது குறித்து போலீசாரும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.






      Dinamalar
      Follow us