/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பஸ் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கி செல்வது தொடர்கிறது; கூடுதல் பஸ்களுடன் கண்காணிப்பை அதிகப்படுத்துங்க
/
பஸ் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கி செல்வது தொடர்கிறது; கூடுதல் பஸ்களுடன் கண்காணிப்பை அதிகப்படுத்துங்க
பஸ் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கி செல்வது தொடர்கிறது; கூடுதல் பஸ்களுடன் கண்காணிப்பை அதிகப்படுத்துங்க
பஸ் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கி செல்வது தொடர்கிறது; கூடுதல் பஸ்களுடன் கண்காணிப்பை அதிகப்படுத்துங்க
ADDED : டிச 30, 2024 07:04 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு பஸ்களில் படிக்கட்டிகளில் மாணவர்கள், இளைஞர்கள் தொங்கி செல்வதை அசம்பாவிதம் நடக்கும் தடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் இதன்மீது கவனம் செலுத்த வேண்டும்.
மாவட்டம் அதிக கிராமப் பகுதிகளைக் கொண்டதால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தனியார் நிறுவனங்களில் வேலை செய்வோர் என பலரும் திண்டுக்கல், பழநி உள்பட மாவட்டத்தில் உள்ள முக்கிய நகர் பகுதிகளுக்கு வர வேண்டிய சூழல் இருக்கிறது.
குறிப்பாக பள்ளி, கல்லுாரிகள் அனைத்துமே நகர் பகுதிகளை ஒட்டியே உள்ளன. இதனால், கிராப்புறங்களிலிருந்து அதிகளவில் பஸ்களை பயன்படுத்தியே நகருக்கு வருகின்றனர்.
டவுன் பஸ்கள் சமீப காலமாக பல இடங்களில் பழுதாகி விபத்தை சந்திக்கிறது. பஸ்களை சரியாக பராமரிக்காததால் பஸ் ஓடிக்கொண்டு இருக்கும் போதே மேல்டாப் கழன்று பறப்பது, படிகள் உடைவது, சீட் கழன்று பயணிகள் கீழே விழுவது, கண்ணாடி பெயர்ந்தும், மேல் தகரம் உடைந்து மழைநீர் ஒழுகுவது என அடுக்கடுக்காக பிரச்னைகளை பயணிகள் தினமும் சந்திக்கின்றனர். அரசு பஸ்கள் நிலைமை தெரியாமல் பள்ளி மாணவர்கள் வேகமாக ஓடி படியிலும் கம்பியிலும் தொங்கியபடி பயணிக்கின்றனர்.
டிரைவர் கண்டக்டர் கண்டித்தாலும் கேட்பதில்லை. பெரிய அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசார் காலை,மாலை நேரங்களில் கண்காணிக்க வேண்டும். 'படியில் பயணம்,நொடியில் மரணம்' என,பெரும்பாலான பஸ்களிலும் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனாலும்,விழிப்புணர்வு இன்றி படிக்கட்டு பயணம் தொடர்கிறது. படிக்கட்டு பயணத்தால் எண்ணற்ற விபத்துகள் கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ளன. போக்குவரத்து துறை அதிகாரிகளும் இது குறித்து கண்டுகொள்வதில்லை. இதனால் சாகசம்செய்யும் நோக்கில் இளைஞர்கள் படிக்கட்டுகளில் பயணிப்பதையும், கம்பிகளை பிடித்தபடி தொங்குவதையும் வழக்கமாக கொண்டனர்.
தனியார் பஸ்களில் இவ்வாறு தொங்கி செல்வது அதிகமாகிறது. தனியார் பஸ்களின் நடத்துநர்கள் இதைப்பற்றி கவலைப்படுவதே இல்லை. கூட்டம் ஏறினால் போதுமென நினைக்கின்றனர். மாணவர்களும் எவர் சொல்வதையும் கேட்காமல் நடக்கிறது.

