/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தகுதிச்சான்று இல்லாத ஆம்னி பஸ் பறிமுதல்
/
தகுதிச்சான்று இல்லாத ஆம்னி பஸ் பறிமுதல்
ADDED : செப் 19, 2024 05:09 AM
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தகுதி சான்று இல்லாத ஆம்னிபஸ் பறிமுதல் செய்யப்பட்டதோடு ரோடு விதிகளை மதிக்காத 10 வாகனங்களுக்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.
திண்டுக்கல் வட்டார போக்குவரத்து துறை மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோ தலைமையிலான அதிகாரிகள் கொடைரோடு பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது மதுரை டூ பெங்களூரு செல்வதற்காக 25 பயணிகளுடன் ஆம்னி பஸ் வந்தது. அதிகாரிகள் அந்த பஸ்சை சோதனை நடத்தியதில் தகுதி சான்று இல்லாமல் இயக்கப்பட்டது தெரிந்தது. இதை தொடர்ந்து பஸ்சை பறிமுதல் செய்த அதிகாரிகள் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து பயணிகளை வேறு பஸ்சில் அனுப்பினர். இதோடு அதிக ஒலி,ஒளி அனுமதியின்றி இயக்கம்,ரோடு விதிகளை மதிக்காமல் சென்ற 10 வாகனங்களுக்கு ரூ.75 ஆயிரம் விதித்தனர்.

