sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 20, 2025 ,மார்கழி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 மஞ்சளாறு அணை நீரை திறக்க தீர்மானம்

/

 மஞ்சளாறு அணை நீரை திறக்க தீர்மானம்

 மஞ்சளாறு அணை நீரை திறக்க தீர்மானம்

 மஞ்சளாறு அணை நீரை திறக்க தீர்மானம்


ADDED : டிச 12, 2025 06:51 AM

Google News

ADDED : டிச 12, 2025 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்தலக்குண்டு: மஞ்சளாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பதற்கான விவசாயிகளின் கருத்துகேட்கும் கூட்டம் வத்தலக்குண்டு பிரிவு அலுவலகத்தில் உதவிபொறியாளர்கள் தளபதி, கமலக்கண்ணன் முன்னிலையில் நடந்தது. மஞ்சளாறு அணை பாசன சங்கத் தலைவர்கள், பிரதிநிதிகள்,விவசாயிகள் பங்கேற்றனர்.

கண்மாய்களில் தண்ணீர் இல்லாததால் மஞ்சளாறு அணையிலிருந்து முறைப்பாசனம் மூலம் முதல் மூன்று நாட்கள் மூங்கில் அணைக்கட்டு, புது அணைக்கட்டு, நாகர்வள்ளி அணைக்கட்டுக்கு திறந்து விட வேண்டும். மீதி உள்ள நான்கு நாட்களுக்கு கணவாய்ப்பட்டி, வைரவன், பெரியகுளம், பிலாத்து, குன்னுவராயன் கோட்டை, ஆலங்குளம் அணைக்கட்டுகளுக்கு திறந்து விட வேண்டும்.

பழைய ஆயக்கட்டிற்கு 45 கன அடி, வலது பிரதான கால்வாய் 30 கன அடி என மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 35 அடிக்கு மேல் உள்ள தண்ணீரை விரைவில் பாசனத்திற்கு திறந்து விடுமாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us