sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

10 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுப்பு; வியாபாரிகளுக்கு தேவை விழிப்புணர்வு.. பரிதவிக்கும் அப்பாவிகள்

/

10 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுப்பு; வியாபாரிகளுக்கு தேவை விழிப்புணர்வு.. பரிதவிக்கும் அப்பாவிகள்

10 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுப்பு; வியாபாரிகளுக்கு தேவை விழிப்புணர்வு.. பரிதவிக்கும் அப்பாவிகள்

10 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுப்பு; வியாபாரிகளுக்கு தேவை விழிப்புணர்வு.. பரிதவிக்கும் அப்பாவிகள்

9


ADDED : ஏப் 05, 2024 05:40 AM

Google News

ADDED : ஏப் 05, 2024 05:40 AM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

2016 ல் மத்திய அரசால் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அவற்றுக்கு மாற்றாக புதிய நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. அந்த நேரத்தில் சிலர் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என தவறான வதந்தியை பரப்பினர். இந்த தவறான வதந்தியால் வியாபாரிகள், பஸ் நடத்துனர்கள் என பலரும் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தனர்.

இதை தொடர்ந்து அரசு, வங்கி அதிகாரிகள் அனைத்து வகையான 10 ரூபாய்நாணயங்களும் செல்லும் என தெரிவித்து வந்தனர்.

இதனால் மற்ற மாவட்டங்களில் இந்த நாணயத்தை பயன்படுத்த தொடங்கி விட்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க சிலர் மறுத்து வருகின்றனர். இதனால் பிற மாவட்டங்களில் இருந்து வரும் பொதுமக்கள் 10 ரூபாய் நாணயத்தை கொடுத்து பொருட்கள் வாங்கும் போதும், பஸ் பயணங்களின் போதும் நாணயத்தை வாங்க மறுப்பதால் வாக்குவாதம் தொடர்கிறது. 10 ரூபாய் நாணயம் குறித்த தவறான வதந்தியாலும், அறியாமையாலும் பொதுமக்கள் பலர் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர்.இது குறித்து வியாபாரிகள் முதல் பொதுமக்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் பத்து ரூபாய் நாணயம் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகிறது. மாவட்ட நிர்வாகமும் வழி காண வேண்டும்.






      Dinamalar
      Follow us