/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பொங்கல் செங்கரும்பு வரத்து துவக்கம்
/
பொங்கல் செங்கரும்பு வரத்து துவக்கம்
ADDED : டிச 14, 2025 05:20 AM

வடமதுரை: பொங்கல் பண்டிகை ஸ்பெஷலான செங்கரும்பு விற்பனை தற்போதே வடமதுரையில் மும்முரமாக நடக்கிறது.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்காக செங்கரும்பு பயிரிடப்படும். பொங்கலுக்கு பல வாரங்கள் முன்பிருந்தே தெருவோரக் கடைகளில் விற்பனை நடக்கும். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஆவலுடன் வாங்கி செல்வர்.
தற்போது வடமதுரை, அய்யலுாரில் வாரச்சந்தை கூடும் நாட்களில் மட்டும் சில்லரையில் கரும்பு விற்பனை நடக்கிறது. சில்லரை கரும்பு வியாபாரிகள் கூறுகையில், ' தற்போது விவசாயிகளிடம் மொத்தமாக விலை பேசி தேவைக்கேற்ப வெட்டி கொண்டு வருகிறோம். சில்லரையில் முழு கரும்பு, துண்டுகள் தரத்திற்கேற்ப விலை வைத்து விற்கிறோம். பல ஆண்டுகளுக்கு முன்னர் வரை பொங்கலுக்கு ஒரு சில மாதங்கள் முன்பே சில்லரை விற்பனையில் தினமும் விற்றோம். கரும்பு நுகர்வில் மக்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக தற்போது கிராம மக்களை நம்பி சந்தை நாட்களில் மட்டும் கடை அமைத்து விற்கிறோம்' என்றனர்.

