sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மக்கள் தங்கள் கோரிக்கையை மனுவாக வழங்க 'நமது விருப்பம் மோடியின் உத்தரவாதம்' பெட்டி பா.ஜ., மாவட்ட தலைவர் தனபால் தகவல்

/

மக்கள் தங்கள் கோரிக்கையை மனுவாக வழங்க 'நமது விருப்பம் மோடியின் உத்தரவாதம்' பெட்டி பா.ஜ., மாவட்ட தலைவர் தனபால் தகவல்

மக்கள் தங்கள் கோரிக்கையை மனுவாக வழங்க 'நமது விருப்பம் மோடியின் உத்தரவாதம்' பெட்டி பா.ஜ., மாவட்ட தலைவர் தனபால் தகவல்

மக்கள் தங்கள் கோரிக்கையை மனுவாக வழங்க 'நமது விருப்பம் மோடியின் உத்தரவாதம்' பெட்டி பா.ஜ., மாவட்ட தலைவர் தனபால் தகவல்


ADDED : மார் 10, 2024 05:27 AM

Google News

ADDED : மார் 10, 2024 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : '' பா.ஜ., சார்பில் நமது விருப்பம் மோடியின் உத்தரவாதம் பெயரில் தங்களது கோரிக்கைகளை மனுவாக வழங்க வசதியாக சட்டசபை தொகுதிகளில் மக்கள் கூடும் இடங்களில் பெட்டிகள் வைக்கப்பட உள்ளதாக,'' பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் தனபால் தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது : நமது விருப்பம் மோடியின் உத்தரவாதம் என்ற பெட்டிகள் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்கப்பட உள்ளன. கருத்துக் கணிப்பு , தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி பெட்டிகளில் போடலாம். மார்ச் 20 வரை மனுக்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளிலும் தினந்தோறும் ஒரு பகுதி என அனைத்து பகுதிகளிலும் பெட்டியில் வைத்து பொதுமக்களிடம் மனுக்கள் சேகரிக்கப்படுகிறது.

இவைகள் தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும்.தேர்தல் முடிவுக்கு பிறகு மீண்டும் பா.ஜ., ஆட்சிக்கு வந்தவுடன் தங்கள் கோரிக்கையில் அனைத்தையும் பிரதமர் மோடி நிறைவேற்றுவார். 2019 ஆண்டு இதேபோல் மனுக்கள் பெறப்பட்டு 95 சதவீத பணிகளை பிரதமர் மோடி நிறைவேற்றி உள்ளார்.

பழநி தொப்பம்பட்டி அருகே உள்ள முத்துநாயக்கன்பட்டியில் மாட்டு வண்டி பந்தயம் நடத்த பா.ஜ., நிர்வாகி மகுடீஸ்வரனால் போலீசாரிடம் 20 நாட்களுக்கு முன்பே மனு அளிக்கப்பட்டது. அமைச்சர் சக்கரபாணி தலையீடு காரணமாக அனுமதி வழங்கப்படவில்லை. போலீசாரை வைத்து அரசு அடக்குமுறையை கையாள்கிறது என்றார்.






      Dinamalar
      Follow us