sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பந்தாடப்பட்ட ரோடுகள்; எங்கும் கழிவுநீர் தேக்கம் ஒட்டன்சத்திரம் நகராட்சி 14 வது வார்டில் அவதி

/

பந்தாடப்பட்ட ரோடுகள்; எங்கும் கழிவுநீர் தேக்கம் ஒட்டன்சத்திரம் நகராட்சி 14 வது வார்டில் அவதி

பந்தாடப்பட்ட ரோடுகள்; எங்கும் கழிவுநீர் தேக்கம் ஒட்டன்சத்திரம் நகராட்சி 14 வது வார்டில் அவதி

பந்தாடப்பட்ட ரோடுகள்; எங்கும் கழிவுநீர் தேக்கம் ஒட்டன்சத்திரம் நகராட்சி 14 வது வார்டில் அவதி


ADDED : நவ 02, 2024 06:13 AM

Google News

ADDED : நவ 02, 2024 06:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டன்சத்திரம்: குடிநீர் குழாய் அமைப்பதற்காக தெரு ரோடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதால் போக்குவரத்திற்கு சிரமம், தெருவில் சுற்றி தெரியும் நாய்களால் பாதிப்பு என ஒட்டன்சத்திரம் நகராட்சி 14 வது வார்டில் தீர்க்கப்படாத பிரச்னைகள் ஏராளம் உள்ளன.

நல்லாக்கவுண்டர் நகர், கைராசிநகர், திண்டுக்கல் -பழநி ரோடு, போலீஸ் குடியிருப்பு, ஏ.எஸ்.எம். பேட்டை பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் மயானத்திற்கு சுற்றுச்சுவர் கட்டும்பணி, மின்விளக்கு, தண்ணீர் வசதி அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

நல்லாக்கவுண்டன் நகரில் கழிவுநீர் வெளியேற வசதி இல்லை.

இப்பகுதியில் சாக்கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கே. ஆர். அரசு மேல்நிலைப் பள்ளி கிழக்கு பகுதியில் செல்லும் ஓடையை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நல்லாக்கவுண்டன்நகர் மேற்கு பகுதியில் செல்லும் ஓடை தூர்வாரப்பட்டுள்ளது.

ரேஷன் கடைக்கு சொந்த கட்டடம் கட்டப்பட்டுள்ளது. வார்டில் உள்ள பூங்காக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் பயன்பாடின்றி காணப்படுகிறது.

கைராசி நகரில் இருந்து தும்மிச்சம்பட்டி புதுார் செல்லும் ரோட்டில் தெரு விளக்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

வார்டுக்குள் குடிநீர் பிரச்னை இல்லை. பழுதான தெரு விளக்குகள் உடனுக்குடன் மாற்றப்பட்டு வருகிறது. பல இடங்களில் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. வார்டில் விரிவாக்கப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

வார்டுக்குள் இருக்கும் சாக்கடையை சுற்றி புல் பூண்டுகள் முளைத்துள்ளன. இதனால் இங்கு விஷ பூச்சிகள் தங்களது புகலிடமாக மாற்றி உள்ளது.

தெரு நாய்களால் தொல்லை


மகுடீஸ்வரன், அ.தி.மு.க., நகர விவசாய அணி இணைச் செயலாளர்: நல்லாக் கவுண்டர் நகரில் சினிமா தியேட்டருக்கு பின்பக்கம் உள்ள தெருவில் கழிவுநீர் வெளியேற வழி இல்லாததால் வீடுகளுக்கு முன்பு தேங்கியுள்ளது. நீண்ட நாட்களாக உள்ள இப்பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்.எம்.எஸ்.பேட்டைக்கு ரோடு வசதி இல்லாததால் மழை காலத்தில் போக்குவரத்திற்கு சிரமமாக உள்ளது.

தேவையான இடங்களில் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும். தெரு நாய்கள் தொல்லை அதிகம் உள்ளதால் கொசு மருந்து அடிக்க வேண்டும்.

குடிநீர் பிரச்னை இல்லை


செல்வி, குடும்பத் தலைவி, நல்லாகவுண்டன்நகர்: வார்டில் குடிநீர் பிரச்னை தீர்க்கப்பட்டு உள்ளது. மேலும் குடிநீர் கொண்டு வருவதற்கு புதிதாக குழாய்களும் போடப்பட்டுள்ளது. ரேஷன் கடைக்கு சொந்த கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அருகிலே ரேஷன் கடை இருப்பதால் சிரமம் இன்றி பொருட்களை வாங்கி செல்கிறோம்.

ஒளிரும் தெருவிளக்குகள்


இலக்கியா, பியூட்டி பார்லர் உரிமையாளர், கைராசி நகர்: பழநி ரோட்டில் இருந்து தும்மிச்சம்பட்டி புதுார் செல்லும் ரோட்டில் தெரு விளக்குகள் போடப்பட்டுள்ளதால் இரவு நேரத்தில் பயமின்றி செல்ல முடிகிறது. முன்பு திண்டுக்கல் பழநி ரோட்டில் குப்பை கொட்டப்பட்டு வந்ததால் வார்டுக்குள் துர்நாற்றம் வீசியது. தற்போது குப்பை எல்லாம் அகற்றப்பட்டு விட்டது.

கோரிக்கைகள் நிறைவேற்றம்


ரமேஷ், கவுன்சிலர், (தி.மு.க.,): வார்டில் உள்ள ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்குள்ள மயானத்திற்கு சுற்றுச்சுவர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் முடிந்தவுடன் தெரு ரோடுகள் அனைத்தும் புதுப்பிக்கப்படும். ஓடை அருகே செல்லும் ரோட்டில் தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. நல்லா கவுண்டர் நகரில் பூங்கா அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய கட்டடம் கட்டப்படும். நகரின் விரிவாக்கப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us