sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நிறுத்தங்கள் இருந்தும் நிழற்குடை இல்லாததால்  பரிதவிக்கும் பயணிகள் ரோடுகளில் நின்று பஸ்களில் ஏறுவதால் விபத்து

/

நிறுத்தங்கள் இருந்தும் நிழற்குடை இல்லாததால்  பரிதவிக்கும் பயணிகள் ரோடுகளில் நின்று பஸ்களில் ஏறுவதால் விபத்து

நிறுத்தங்கள் இருந்தும் நிழற்குடை இல்லாததால்  பரிதவிக்கும் பயணிகள் ரோடுகளில் நின்று பஸ்களில் ஏறுவதால் விபத்து

நிறுத்தங்கள் இருந்தும் நிழற்குடை இல்லாததால்  பரிதவிக்கும் பயணிகள் ரோடுகளில் நின்று பஸ்களில் ஏறுவதால் விபத்து

1


UPDATED : டிச 18, 2025 09:12 AM

ADDED : டிச 18, 2025 06:12 AM

Google News

UPDATED : டிச 18, 2025 09:12 AM ADDED : டிச 18, 2025 06:12 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தில் நான்கு வழிச்சாலைகள் அமைக்கும் முன்னர் டவுன் பஸ்கள் நின்று செல்லும் பெரும்பாலான இடங்களில் கான்கிரீட் கட்டுமானத்திலான நிழற்குடைகள் அமைக்கப்பட்டிருந்தன.

நான்கு வழிச்சாலை பணியில் நிழற்குடைகள் இடிக்கப்பட்டு தற்போது பல கி.மீ., துார இடைவெளியில் ஒருசில இடங்களில் மட்டுமே தகர சீட்டுகள் பயணியர் நிழற்குடைகளாக மாற்றப்பட்டுள்ளன. திருச்சி நான்கு வழிச்சாலையில் திண்டுக்கல் மாவட்ட எல்லைக்குள் தங்கம்மாபட்டி, அய்யலுார், கொல்லப்பட்டி, ஆண்டிமாநகர், டி.என்.பாரைப்பட்டி பிரிவு, தாமரைப்பாடி, முள்ளிப்பாடி, மா.மூ.கோவிலுார் பிரிவு ஆகிய 8 இடங்களில் மட்டுமே பயணியர் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு மட்டும் டவுன் பஸ்கள் ஒதுங்கி நின்று செல்ல வசதியாக ஒதுங்குதளம் (பஸ் பே) அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுத்தங்கள் தவிர திருச்சி ரோட்டில் மட்டும் நிழற்குடைகள் , 'பஸ் பே' இல்லாமல் 15 டவுன் பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இதே நிலை தான் மதுரை, நத்தம், பழநி, கரூர் ரோடுகளிலும் உள்ளது.

இங்கெல்லாம் பயணிகள் வெயில், மழைக்கு ஒதுங்கி நிற்க எந்த வசதியும் இல்லை. இவ்விடங்களில் பஸ்கள் ரோட்டிலே நின்று செல்லும்போது பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகின்றன.

விபத்துக்கள் நடந்த விதம் காரணம் குறித்து ஆய்வு செய்தால் 'பஸ் பே' இல்லாததால் ஏற்பட்டவை அதிகம் என்பதை கண்டறியலாம்.

இனியும் அலட்சியம் செய்யாமல் எல்லா பஸ் நிறுத்தங்களிலும் நிழற்குடைகள், 'பஸ் பே' வசதிகளை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us