/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சரக்கு வாகனங்களில் பயணிப்போரால் விபத்து: முறைப்படுத்த தேவையாகிறது நடவடிக்கை
/
சரக்கு வாகனங்களில் பயணிப்போரால் விபத்து: முறைப்படுத்த தேவையாகிறது நடவடிக்கை
சரக்கு வாகனங்களில் பயணிப்போரால் விபத்து: முறைப்படுத்த தேவையாகிறது நடவடிக்கை
சரக்கு வாகனங்களில் பயணிப்போரால் விபத்து: முறைப்படுத்த தேவையாகிறது நடவடிக்கை
ADDED : மே 17, 2024 06:28 AM

மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பயணிகள் வந்து செல்கின்றனர்.
ஒட்டன்சத்திரம் மார்க்கெட் , பழநி கொய்யா மார்க்கெட், காந்தி மார்க்கெட் பகுதிகளிலிருந்து சரக்கு வாகனங்கள் அதிக அளவில் மாவட்டத்திற்கு வந்து செல்கின்றன.
உள்ளூர் ,வெளியூர் செல்லும் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்படுகிறது.
திருவிழாக்கள், விவசாய பணிக்கு, கட்டட வேலைகளுக்கு செல்லும் நபர்களும் சரக்கு வாகனங்களில் பயணிப்பதை அதிக அளவில் கடைப்பிடிக்கின்றனர்.
இதில் நின்று வரும் நபர்களுக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்படுகிறது . மலை பிரதேசங்களில் செல்லும்போது விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லும் வாகன ஓட்டுனர்கள் சிலர் அதி வேகத்தில் செல்கின்றனர்.
இதனால் இதில் பயணிக்கும் நபர்கள் நிலை தடுமாறுகின்றனர். இதனால் போக்குவரத்தில் அச்சமும் ஏற்படுகிறது. கிராமங்களில் முறையாக பஸ் வசதி இல்லாத இடங்களிலில் சரக்கு வாகனங்களை பயன்படுத்தும் நிலை அதிகம் உள்ளது.
சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி வரும் வாகன ஓட்டுநர் , உரிமையாளர்கள் மீது போக்குவரத்து துறையினர் அபராதம் விதிக்கின்றனர்.
இருந்தாலும் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லும் நிலை தொடர்கிறது .
இதனை கட்டுப்படுத்த ஓட்டுனர்கள் தாங்களாக முன்வந்து சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றுவதை தவிர்க்க வேண்டும்.

