/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பங்குனி உத்திர திருவிழா பழநியில் மார்ச் 18-ல் துவக்கம்
/
பங்குனி உத்திர திருவிழா பழநியில் மார்ச் 18-ல் துவக்கம்
பங்குனி உத்திர திருவிழா பழநியில் மார்ச் 18-ல் துவக்கம்
பங்குனி உத்திர திருவிழா பழநியில் மார்ச் 18-ல் துவக்கம்
ADDED : மார் 14, 2024 02:49 AM
பழநி:பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 18ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
இதற்கான விழா பழநி அடிவாரம் திருஆவினன்குடி கோயிலில் அன்று காலை 9:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்க மார்ச் 19 முதல் மார்ச் 27 வரை சுவாமி வீதி உலா நடக்கிறது.
விழாவின் ஆறாம் நாளான மார்ச் 23 மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாணம், இரவு 8:30 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. பங்குனி உத்திர தினமான மார்ச் 24 அதிகாலை 4:30 மணிக்கு மேல் 6:00 மணிக்குள் தீர்த்தம் வழங்குதல், மாலை 4:00 மணிக்கு தேரோட்டம், மார்ச் 27 இரவு 7:00 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் சன்னதி வீதியில் சுவாமி திருஉலா காட்சி, இரவு கொடி இறக்குதலுடன் சுவாமி எழுந்தருளல் நடக்கிறது.

