sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ரூ.34 லட்சம் மோசடியில் ஓ.பி.எஸ்., அணி நிர்வாகி கைது

/

ரூ.34 லட்சம் மோசடியில் ஓ.பி.எஸ்., அணி நிர்வாகி கைது

ரூ.34 லட்சம் மோசடியில் ஓ.பி.எஸ்., அணி நிர்வாகி கைது

ரூ.34 லட்சம் மோசடியில் ஓ.பி.எஸ்., அணி நிர்வாகி கைது


ADDED : நவ 29, 2024 02:38 AM

Google News

ADDED : நவ 29, 2024 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் பழநியில் அரசு வேலை வாங்கி தருவதாக 12 பேரிடம் ரூ.34 லட்சம் மோசடியில் ஈடுபட்ட பன்னீர்செல்வம் அணி மாநில அமைப்பு செயலாளர் கலில்ரகுமானை போலீசார் கைது செய்தனர்.

பழநி டவுன் பகுதியை சேர்ந்தவர் ஆத்திக்கண்ணன் 35. இவர் உட்பட 12 பேரிடம் 2023ல் அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க.,தொண்டர் உரிமை மீட்புக்குழு மாவட்ட பொருளாளராக உள்ள மாதவத்துரை39,கோவையை சேர்ந்த மாநில அமைப்பு செயலாளர் கலில்ரகுமான் இருவரும் பழநி கோயில், வனத்துறை,ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.34 லட்சத்தை பெற்றனர்.

12 பேரும் திண்டுக்கல் குற்றப்பிரிவு போலீசில் புகாரளித்தனர். இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, எஸ்.ஐ.,முத்தமிழ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாதவத்துரை தலைமறைவானார். கலில்ரகுமான் இது போல் மோசடியில் கைது செய்யப்பட்டு கடலுார் மத்திய சிறையில் உள்ளது தெரியவந்தது. அவரை போலீஸ் காவலில் எடுத்து திண்டுக்கல் அழைத்து வந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us