நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : பெண்கள், குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளிலிருந்து பாதுகாக்க வலியுறுத்தி திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோயில் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திண்டுக்கல் நகர் குழு சார்பில் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடந்தது.
நகர தலைவர் சூர்யா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பாலாஜி ,நகர செயலாளர் பிரேம்குமார்,நகர துணைத்தலைவர் தர்மலிங்கம், நிர்வாகிகள் தாமு, பிரபு, சபரிஸ் பங்கேற்றனர்.

