sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நீர்நிலைகளில் தொடர்ந்து நடக்கும் உயிரிழப்புகளை தடுக்கலாமே; அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்

/

நீர்நிலைகளில் தொடர்ந்து நடக்கும் உயிரிழப்புகளை தடுக்கலாமே; அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்

நீர்நிலைகளில் தொடர்ந்து நடக்கும் உயிரிழப்புகளை தடுக்கலாமே; அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்

நீர்நிலைகளில் தொடர்ந்து நடக்கும் உயிரிழப்புகளை தடுக்கலாமே; அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்


ADDED : டிச 11, 2024 04:49 AM

Google News

ADDED : டிச 11, 2024 04:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தில் 6 அணைகள் உள்ளன. வைகயாறு உள்பட பலவும் திண்டுக்கல்லை கடந்து செல்கின்றன. நுாற்றுக்கணக்கான நீர்நிலைகள், ஆயிரக்கணக்கான குளங்கள் உள்ளன. பருவமழை காரணமாக அணைகள், நீர்நிலைகள், குளங்கள் என நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.

விவசாய மாவட்டம் என்பதால் நீர்நிலகள் நிரம்புவது நல்ல விஷயம் என்றாலும், சிறுவர்கள், இளைஞர்கள் என அவ்வப்போது உயிரிழப்பும் ஏற்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் பயன்பாடின்றியுள்ள பல கல்குவாரிகளில் தேங்கும் நீரில் உயிரிழப்போரும் உள்ளனர். குறிப்பாக நீர்நிலைகளில் கரையோரங்களில் துார் வாருகிறோம் என்ற பெயரில் ஆழப்படுத்துகின்றனர். வண்டல் மண் நீர்நிலைகளின் மையப்பகுதியில் தான் எடுக்க வேண்டும்.

கரையோரத்தில் ஆழப்படுத்துவது, வண்டல் மண் எடுப்பது போன்றவற்றால் நீர்நிலைகளுக்கு பலர் தவறி விழுந்து இறக்க நேரிடும். மேலும் தண்ணீர் குடிக்க வரும் கால்நடைகளும் உயிரிழக்க நேரிடுகிறது. சில நாட்களில் அரையாண்டு தேர்வு விடுமுறை, புத்தாண்டு, பொங்கல் என பல பண்டிகை கால விடுமுறைகளும் அடுத்தடுத்து வருகின்றன. திண்டுக்கல்லில் சுற்றுலா தலங்கள் அதிகமிருப்பதால் வெளியூர் பயணிகளின் வருகையும் அதிகமுள்ளன. சமீபத்தில் கூட கொசவபட்டி பேபி குளத்தில் 3 சிறுவர்கள் உயிரிழந்தனர். மாவட்ட நிர்வாகம் உரிய அறிவுறுத்தல்களையும், விழிப்புணர்களையும் ஏற்படுத்த வேண்டும். ஆபத்தான நீர்நிலைகளில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.






      Dinamalar
      Follow us