ADDED : டிச 30, 2025 07:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: பழைய ஓய்வூதியத்திட்டத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும், 21 மாத ஊதிய நிலுவைத்தொகை வழங்கவேண்டும், கருணை பணிநியமன உச்சவரம்பை ரத்து வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள். அனைத்து உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
முதன்மை ஒருங்கிணைப்பாளர் ஜோதி முருகன் தலைமை வகித்தார். பொருளாளர் துரைராஜ் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் அருணாச்சலம் பேசினார். நிர்வாகிகள் சலேத்ராஜா, முத்துராஜ், விஜய் கலந்துகொண்டனர்.

