/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கோடைக்கால தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஆயத்தமாகுங்க! அவசியமாகுது உள்ளாட்சி அமைப்பு நடவடிக்கை
/
கோடைக்கால தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஆயத்தமாகுங்க! அவசியமாகுது உள்ளாட்சி அமைப்பு நடவடிக்கை
கோடைக்கால தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஆயத்தமாகுங்க! அவசியமாகுது உள்ளாட்சி அமைப்பு நடவடிக்கை
கோடைக்கால தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஆயத்தமாகுங்க! அவசியமாகுது உள்ளாட்சி அமைப்பு நடவடிக்கை
ADDED : மார் 09, 2024 09:32 AM

கோடை துவங்கும் முன்பே நகர் மட்டுமின்றி கிராமங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு பரவலாக கொடூர தாக்கத்தை வெளிப்படுத்த துவங்கியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இச்சூழலின் பாதிப்பை மக்கள் நேரடியாக உணரும் நிலை இருந்தது.
ஆண்டுதோறும் மழையளவு கணிசமாக குறைந்து வரும் சூழலில் தண்ணீரை பாதுகாக்க வேண்டிய அவசியம் உருவாகி உள்ளது. தண்ணீரின் மகத்துவத்தை பல வழிகளிலும் உணர்த்திய போதும் இதனை பாதுகாத்து சேமிப்பது, பயன்படுத்துவதில் தற்போது வரை அலட்சியம் நீடிக்கிறது.
மழைநீரின் அடிப்படையான பசுமையை பாதிக்கும் வகையில் மரம், காடுகள் அழிப்பு, விளைநிலங்கள் கட்டடங்களாக மாறுதல் போன்ற அம்சங்கள் வெகுவாக தொடர்கிறது.
வீடுகள், வணிக வளாகங்களில் மழைநீர் சேமிப்பு, வாய்க்கால், குளங்களை துார்வாரி நீராதாரங்களை மேம்படுத்தல் போன்றவை ஏட்டளவில் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.
பெரும்பாலான நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிப்புகளால் அழிந்துள்ளன. கழிவு குவியல்களால் துார்ந்த நிலையில், சமீபத்திய மழை நீர் குளம் கண்மாய் போன்ற சேமிப்பு அமைப்புகளை சென்றடையவில்லை.
மழையின் பயனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியாத அளவிற்கு வீணானது. சில மாதங்களாக நீராதாரங்களில் தேங்கியிருந்த தண்ணீரின் அளவு சமீபத்திய வாரங்களில் வெகுவாக குறைய தொடங்கியுள்ளது. கிணறு, நீர்த்தேக்கங்களின் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது.
இச்சூழலில் தண்ணீரை பயன்படுத்துவதில் சிக்கனமும் அடுத்த மழைக்காலம் வரை தட்டுப்பாட்டை சமாளிக்க சேமித்து வைப்பதும் அத்தியாவசியமாகி உள்ளது.
குடிப்பது, குளிப்பது போன்ற வீட்டு உபயோகங்களில் தேவையற்ற தண்ணீர் செலவினத்தை தவிர்ப்பதுடன், விவசாய பணிகளில் தண்ணீர் மேலாண்மை நுட்பங்களை கடைபிடிக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது. தொழில் நிறுவனங்களில் தண்ணீரை மாசுபடுவதை தவிர்ப்பதுடன் நிலத்தடி நீரை சேமித்து வைக்க வேண்டியதும் அவசியம். வழித்தடங்களில் தண்ணீர் வீணாவதை தவிர்க்க உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

