ADDED : டிச 19, 2024 05:22 AM
அ நிறம் | அளவு
பழநி: பழநி தீயணைப்பு நிலையம் சார்பில் நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமையில் பழநி கோயில் வளாகத்தில் தீத்தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.
கோயில் அலுவலர்கள், பணியாளர்களுக்கு, திட, திரவ, எரிவாயு பொருட்கள் தீப்பற்றினால் அணைக்கும் முறைகள், விபத்தில் சிக்குபவரை காப்பாற்றும் முறைகள், தீத்தடுப்பு உபகரணங்களை பயன்படுத்தும் முறைகள் குறித்து பயிற்றுவிக்கப்பட்டது.
