ADDED : ஜூன் 24, 2024 04:37 AM
அ நிறம் | அளவு
தாண்டிக்குடி : மதுரை திருவிளையாடல் புராண ஆராய்ச்சியாளர்கள் மையத்தின் சார்பாக தாண்டிக்குடியில் பள்ளி மாணவர்களுக்கு நன்னெறி வகுப்புகள் நடந்தது.
ஆராய்ச்சி மையத்தின் மாவட்ட தலைவர் பார்த்தசாரதி ,துணைத் தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். திருவிளையாடல் நன்னெறி பாடல்கள் பற்றிய தேர்வை மாணவர்கள் எழுதினர். வெற்றி பெறும் மாணவர்களுக்கு வரும் ஜூலை 9 ல் மதுரையில் நடக்கும் மாணிக்கவாசகர் குருபூஜை அன்று திருவிளையாடல் புராண ஆராய்ச்சியாளர்கள் மையத்தின் சார்பாக பரிசுகள் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பஜனை போதகர் பாஸ்கரன் செய்தார்.
