sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 டி.கோம்பையில் யானைகள் முகாம்: விவசாயிகள் அச்சம்

/

 டி.கோம்பையில் யானைகள் முகாம்: விவசாயிகள் அச்சம்

 டி.கோம்பையில் யானைகள் முகாம்: விவசாயிகள் அச்சம்

 டி.கோம்பையில் யானைகள் முகாம்: விவசாயிகள் அச்சம்


ADDED : டிச 25, 2025 06:30 AM

Google News

ADDED : டிச 25, 2025 06:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கன்னிவாடி: தருமத்துப்பட்டி பகுதியில் முகாமிட்டுள்ள யானை கூட்டம் வாழை சாகுபடியை சேதப்படுத்துவதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

கன்னிவாடி வனச்சரக பகுதிகளில், வாழை, எலுமிச்சை, மிளகு, காபி சாகுபடி நடக்கிறது. தண்ணீர், உணவு தேவைக்காக மலை கிராம விளைநிலங்களில் வன உயிரினங்கள் புகுந்து சேதப்படுத்துவது தொடர்கிறது.

இரவு மட்டுமின்றி பகல் நேரங்களிலும் யானைகள் விளைநிலங்கள், மெயின் ரோடுகளில் உலா வரத் துவங்கியுள்ளன. சாகுபடி சேதப்படுத்துவது மட்டுமின்றி மலை கிராம விவசாயிகள் அச்சத்துடன் நடமாடும் நிலை நீடிக்கிறது.

ஆடலுார், பன்றிமலை, அரியமலை, பேத்தரைக்காடு, காந்திபுரம் பகுதிகளை தொடர்ந்து தற்போது தருமத்துப்பட்டி அடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

டி.கோம்பை, சத்திரப்பட்டி பகுதியில் 8 யானைகள் முகாமிட்டுள்ளன. இரு நாட்களாக இப்பகுதியில் உள்ள தோட்டங்களில் புகுந்த யானைகள், வாழை, தென்னை சாகுபடியை சேதப்படுத்தி வருகின்றன. நேற்று அதிகாலை முருகேசன், சிவக்குமார் ஆகியோரின் தோட்டங்களில் புகுந்து வாழை, தென்னங்கன்றுகளை சேதப்படுத்தின.






      Dinamalar
      Follow us