/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சித்தரேவு பெருமாள் கோயில் சித்திரை திருவிழா துவங்கியது
/
சித்தரேவு பெருமாள் கோயில் சித்திரை திருவிழா துவங்கியது
சித்தரேவு பெருமாள் கோயில் சித்திரை திருவிழா துவங்கியது
சித்தரேவு பெருமாள் கோயில் சித்திரை திருவிழா துவங்கியது
ADDED : மே 01, 2025 06:52 AM

பட்டிவீரன்பட்டி: சித்தரேவு வரதராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி வரதராஜ பெருமாளுக்கு மஞ்சள், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து கொடிமரத்தில் சிறப்பு பூஜைகள் செய்ய கொடியேற்றப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மே 8ல் திருக்கல்யாணம், 11ல் வரதராஜ பெருமாள் குதிரை வாகனத்தில் சன்னதியில் இருந்து புறப்படுதல், 12ல் அய்யம்பாளையம் மருதாநதி ஆற்றில் இறங்குதல், 13ல் தசாவதாரம், 14ல் ஆஞ்சநேயர் வாகனத்தில் அய்யம்பாளையத்தில் நகர் வலம், 15ல் பூ பல்லாக்கு நடைபெற உள்ளது.
ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் வீரசிவபாலன், தலைமை அர்ச்சகர் ராஜ நரசிம்ம அய்யங்கார், விழா குழுவை சேர்ந்த முருகன், மூர்த்தி, ராமுவேல், புகழேந்திரன், சுதாகர், சந்திரசேகர், கண்ணன் ,ஊர் பொதுமக்கள் இணைந்து செய்கின்றனர்.

