ADDED : மார் 22, 2026 06:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: தமிழ்நாடு பிராமண ஸமாஜம் பிற அமைப்புகளுக்கு கட்டுப்பட்டது அல்ல என மாநிலத் தலைவர் ஹரிஹரமுத்து அய்யர் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை : தமிழ்நாடு பிராமண ஸமாஜம் என்பது தமிழ்நாடு சமூக பதிவு சட்டத்தின் கீழ் முறையாக பதிவு செய்யப்பட்ட சுயாதீன சங்கமாகும். இந்த ஸமாஜம் எந்த ஒரு கூட்டமைப்பு, சங்கங்களின் கூட்டணிக்கும் உட்பட்டதல்ல. தமிழ்நாடு பிராமண ஸமாஜத்தின் பெயரில் வெளிவரும் அனைத்து நடவடிக்கைகளும், அறிக்கைகளும், தீர்மானங்களும் இந்த சங்கத்தின் கீழ் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன. ஸமாஜம் எந்த ஒரு பிற அமைப்புகளுடனும் இணைந்தோ , கட்டுப்பாட்டின் கீழோ செயல் படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

