ADDED : ஜன 08, 2024 05:26 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல், : தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மறைந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட தே.மு.தி.க., சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது.
இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ., காங்.,மார்க்சிஸ்ட் கம்யூ.,உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர். ஊர்வலம் குமரன் பூங்காவில் தொடங்கி, மாநகராட்சி அலுவலகம், காமராஜர் சிலை வழியாக திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டை வந்தடைந்தது. விஜயகாந்தின் உருவப்படத்துக்கு மலர்துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
