ADDED : மார் 11, 2024 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: கோயம்புத்துார் மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் மாசாணி மோனிஷா 35.
இவர் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர். தனது தந்தை ஜெயபாலன் 65, தாய் அம்சவேணி 60, குடும்ப நண்பர் ஆண்டனி 33, தனது 2 வயது மகள் ஆகியோருடன் காரில் உடுமலைப்பேட்டை உறவினர் வீட்டுக்கு சென்றார். வடமதுரை நாடுகண்டனுார் பிரிவு பகுதியில் சென்றபோது காரின் பின்பக்க டயர் வெடித்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்தது. ஜெயபாலன் காயமடைந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

