/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரயிலில் அடிபட்டு 11 மாதத்தில் 70 மயில்கள் இறப்பு
/
ரயிலில் அடிபட்டு 11 மாதத்தில் 70 மயில்கள் இறப்பு
ADDED : நவ 20, 2024 02:36 AM
திண்டுக்கல்:ரயில்களில் அடிபட்டு இறக்கும் மயில்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திண்டுக்கல் பகுதியில் மட்டும் 11 மாதத்தில் 70 மயில்கள் இறந்துள்ளன.
சென்னையிலிருந்து வரும் ரயில்கள் வடமதுரை,அய்யலுார் வழியாக திண்டுக்கல் வருகின்றன. கோவையிலிருந்து வரும் ரயில்கள் பழநி, அக்கரைப்பட்டி வழியாக திண்டுக்கல் வருகின்றன. இந்த 2 வழித்தடங்களிலும் காடுகள், வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம். சரக்கு ரயில்களில் அரிசி,கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள் ஏற்றி வரும் போது தண்டவாளங்களில் சிறிது சிதறும்.
இந்த உணவுப்பொருட்களை உண்பதற்காக ஏராளமான மயில்கள் தண்டவாளப்பகுதிகளில் குவிகின்றன. ரயில் வரும் நேரத்தில் தள்ளிப்போக முடியாமல் அடிபட்டு இறக்கின்றன.
அவற்றை ரயில்வே போலீசார் வனத்துறையிடம் ஒப்படைக்கின்றனர். இந்தாண்டு 11 மாதங்களில் 70 மயில்கள் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளன.

