/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மழை பெய்தாலே கழிவுநீர் சிதிலமடைந்த பூங்கா சிரமத்தின் பிடியில் ஒட்டன்சத்திரம் 10வது வார்டு மக்கள்
/
மழை பெய்தாலே கழிவுநீர் சிதிலமடைந்த பூங்கா சிரமத்தின் பிடியில் ஒட்டன்சத்திரம் 10வது வார்டு மக்கள்
மழை பெய்தாலே கழிவுநீர் சிதிலமடைந்த பூங்கா சிரமத்தின் பிடியில் ஒட்டன்சத்திரம் 10வது வார்டு மக்கள்
மழை பெய்தாலே கழிவுநீர் சிதிலமடைந்த பூங்கா சிரமத்தின் பிடியில் ஒட்டன்சத்திரம் 10வது வார்டு மக்கள்
ADDED : மே 18, 2024 06:14 AM

ஒட்டன்சத்திரம், ; பயன்பாட்டிற்கு வராத சின்னக்குளம் நடைபாதை, சிதிலமடைந்த பூங்கா என ஒட்டன்சத்திரம் நகராட்சி 10வது வார்டில் பிரச்னைகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது.
தென்றல் நகர், திருவள்ளுவர் சாலை, மார்க்கெட் பைபாஸ் ரோடு, திண்டுக்கல் பழநி சாலை, சடையப்ப நாயக்கர்பேட்டை பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் திருவள்ளுவர் ரோட்டில் உள்ள சாக்கடை சிறிதாக இருப்பதால் மழை காலத்தில் கழிவு நீர் தெருக்களில் வழிந்து ஓடுகிறது.
சின்னக்குளம் கரையை சுற்றி ரூ. பல கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் வீணாகிறது. நடைபாதை தெரியாத அளவிற்கு புதர்கள் மண்டி உள்ளன. காய்கறி மார்க்கெட் இடம் பெயர்ந்த பின்பும் மார்க்கெட் பைபாஸ் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. வாகனங்கள் வரைமுறையின்றி நிறுத்தப்படுவதால் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இங்குள்ள பூங்கா சிதிலமடைந்து பயன்படுத்தாது முடங்கி உள்ளது. மார்க்கெட் பைபாஸ் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ரோடை அகலப்படுத்த வேண்டும். மார்க்கெட் பைபாஸ் ரோடு திருவள்ளுவர் சாலை சந்திப்பில் சாக்கடையை மூடி உள்ள இரும்பு மூடி வளைந்து விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. ஓடை பணிகளால் சின்னக்குளம் செல்லும் ஓடையொட்டிய குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
நாய்கள் தொல்லை
சிவக்குமார், பா.ஜ., நகரத் தலைவர் ஒட்டன்சத்திரம்: சின்னக்குளம் பகுதியில் ரூ.பல கோடி செலவில் அமைக்கப்பட்ட நடைபாதை இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. திருவள்ளுவர் சாலையில் மழைக்காலத்தில் கழிவு நீர் தேங்காமல் இருக்கும் வகையில் சாக்கடையை அகலப்படுத்த வேண்டும். திருவள்ளுவர் சாலையிலிருந்து மார்க்கெட் செல்லும் இணைப்பு ரோட்டை சீரமைக்க வேண்டும். சின்ன குளம் தெற்கு பகுதியில் இறைச்சிக் கழிவுகளுடன் குப்பை கொட்டப்படுவதால் நாய்கள் தொல்லை அதிகம் உள்ளது.
சாக்கடை மூடியை அகற்றுங்க
சேகர், ஹிந்து வியாபாரிகள் நலச் சங்க அமைப்புச் செயலாளர்: திருவள்ளுவர் சாலை மார்க்கெட் பைபாஸ் ரோடு இணையும் பகுதியில் போடப்பட்டுள்ள சாக்கடை மூடி ஆபத்தான நிலையில் உள்ளது. இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். சின்ன குளத்திற்கு செல்லும் ஓடையை தூர்வாரி சீரமைப்பு பணிகள் நடந்து வருவது வரவேற்கத்தக்கது. மார்க்கெட் வளாகத்தில் கட்டப்படும் கடைகளுக்கு வாடகையை குறைத்து விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு
ஆ.அம்ச நிவேதா, கவுன்சிலர் (தி.மு.க.,): காமாட்சியம்மன் கோயிலில் இருந்து சின்ன குளம் வரை செல்லும் ஓடையை துார்வாரி சிமென்ட் தளத்துடன் கைப்பிடி சுவர் அமைக்க அமைச்சரிடம் கோரிக்கை வைத்ததின் பயனாக தற்போது ரூ.6 .6 கோடி செலவில் பணிகள் நடந்து வருகிறது. இதன்மூலம் நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
மழை நீர் தேங்காமல் இருக்க வடிகால் அமைக்கப்பட உள்ளது. குப்பை அள்ளப்பட்டு சாக்கடைகள் துார்வாரப்பட்டு வருகிறது. புதிதாக சிமென்ட் ரோடு அமைக்கப்பட உள்ளது. சாக்கடை மூடிகள், திருவள்ளுவர் சாலை மார்க்கெட் இணைப்பு ரோடு சீரமைக்கப்படும் என்றார்.

