/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆதார் கார்டை புதுப்பிக்க குவிந்த மக்கள் எப்போதும் புதுப்பிக்கலாம் என கூறியதால் ஆறுதல்
/
ஆதார் கார்டை புதுப்பிக்க குவிந்த மக்கள் எப்போதும் புதுப்பிக்கலாம் என கூறியதால் ஆறுதல்
ஆதார் கார்டை புதுப்பிக்க குவிந்த மக்கள் எப்போதும் புதுப்பிக்கலாம் என கூறியதால் ஆறுதல்
ஆதார் கார்டை புதுப்பிக்க குவிந்த மக்கள் எப்போதும் புதுப்பிக்கலாம் என கூறியதால் ஆறுதல்
ADDED : செப் 13, 2024 05:40 AM

திண்டுக்கல்: ஆதார் கார்டை புதுப்பிக்க செப்.14 கடைசி நாள் என தகவல் பரவ திண்டுக்கல் தலைமை தபால் நிலையத்தில் ஏராளமானோர் குவிந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் வந்து புதுப்பிக்கலாம் என அதிகாரிகள் கூற ஆறுதல் அடைந்தனர்.
ஆன்லைனில் ஆதார் கார்டுகளை புதுப்பிப்பவர்களுக்கு செப்.14 வரை இலவசம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால் சிலர் தபால் நிலையங்களில் ஆதார் கார்டுகளை புதுப்பிக்க செப்.14 கடைசி நாள் என தவறான செய்தியை பரப்பினர். இதையறிந்த திண்டுக்கல் சுற்றுப் பகுதிகளை சேர்ந்த மக்கள் செப்.14க்கு பிறகு ஆதார் கார்டை புதுப்பிக்க முடியாது என நினைத்து நேற்று காலை முதல் திண்டுக்கல் தலைமை தபால் நிலையத்தில் குவிந்தனர். ஆதார் கார்டுகளை எப்போது வேண்டுமானாலும் புதுப்பிக்கலாம் அதற்கு கால அவகாசமெல்லாம் இல்லை என தபால் நிலைய அதிகாரிகள் கூறினர். இதையடுத்து மக்கள் கலைந்தனர்.
திண்டுக்கல் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் பரமசிவம் கூறியதாவது: ஆதார் கார்டை புதுப்பிக்காதவர்கள் தபால் நிலையங்களில் செப்.14க்குள் புதுப்பிக்க வேண்டும் என பொய் செய்தியை சிலர் பரப்புகின்றனர். இதை யாரும் நம்ப வேண்டாம். ஆதார் தொடர்பான சேவைகளை எப்போது வேண்டுமானாலும் பெறலாம். அதற்கு கால நிர்ணயம் கிடையாது என்றார்.

