/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஓட்டுச்சாவடியில் காத்திருப்போம் கண்டிப்பாக ஓட்டு போட வாங்க: பூத் சிலிப் கொடுத்து அழைப்பு விடுத்த கலெக்டர்
/
ஓட்டுச்சாவடியில் காத்திருப்போம் கண்டிப்பாக ஓட்டு போட வாங்க: பூத் சிலிப் கொடுத்து அழைப்பு விடுத்த கலெக்டர்
ஓட்டுச்சாவடியில் காத்திருப்போம் கண்டிப்பாக ஓட்டு போட வாங்க: பூத் சிலிப் கொடுத்து அழைப்பு விடுத்த கலெக்டர்
ஓட்டுச்சாவடியில் காத்திருப்போம் கண்டிப்பாக ஓட்டு போட வாங்க: பூத் சிலிப் கொடுத்து அழைப்பு விடுத்த கலெக்டர்
ADDED : ஏப் 03, 2024 05:25 AM

திண்டுக்கல் : ஓட்டுச்சாவடிகளில் காத்திருப்போம், கண்டிப்பா ஓட்டு போட வாங்க என பொதுமக்களிடம் பூத் சிலிப் கொடுத்த கலெக்டர் பூங்கொடி அழைப்பு விடுத்தார்.
மாவட்டத்தில் 7,80,096 ஆண், 8,26,737 பெண், 218 இதரர்கள் என 16,07,051 வாக்காளர்கள்உள்ளனர். ஏப்.19 ல் ஓட்டுப்பதிவு என்பதால் திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி நேற்று தொடங்கப்பட்டது.
மாநிலம், சட்டசபை தொகுதி, பெயர், பாலினம், வாக்காளர் அடையாள அட்டை எண், தந்தை பெயர், பாகம் எண், பாகத்தின் பெயர், வரிசை எண், ஓட்டுச்சாவடியின் பெயர், ஓட்டுப்பதிவு நாள், ஓட்டுப்பதிவு நேரம், தேர்தல் ஆணைய இணையதள முகவரி, கட்டணமில்லா தொலைபேசி எண்கள், ஓட்டுச்சாவடி நிலை அலுவலரின் பெயர் ,எண் உள்ளிட்ட தகவல்கள் தமிழ் , ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ளன.
இதன் பூத் சிலிப் வழங்கும் பணியினை சென்னமநாயக்கன்பட்டி இந்திரா நகரில் கலெக்டர் பூங்கொடி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய கலெக்டர், நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்க, ஆனால் கட்டாயம் உங்களின் ஓட்டை பதிவு செய்து விடுங்கள். ஓட்டுச்சாவடிகளில் அலுவலர்களாகிய நாங்கள் காத்திருப்போம். கண்டிப்பாக ஓட்டு போட வாங்க. நீங்கள் என் ஓட்டுச்சாவடி எங்கே என மிரட்டி கேட்கவும் உங்களுக்கு உரிமை உண்டு. காரணங்கள் கூறி ஓட்டுப்போடுவதை தவிர்க்காதீர்கள்.
100 சதவீதம் அனைவரும் வர வேண்டும். பெண்களுக்கு தனியே வரிசைகள் உள்ளன. மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பார்வையற்ற, பலவீனமான வாக்காளர்கள் ஓட்டளிக்க செய்வதற்காக வாக்களிக்கும் வயது வந்த ஒரு துணைவரை அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர் என்றார்.

