sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்ற முயன்ற கணவர்,உட்பட மூவரும் மீட்பு

/

தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்ற முயன்ற கணவர்,உட்பட மூவரும் மீட்பு

தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்ற முயன்ற கணவர்,உட்பட மூவரும் மீட்பு

தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்ற முயன்ற கணவர்,உட்பட மூவரும் மீட்பு


ADDED : ஏப் 03, 2024 08:35 PM

Google News

ADDED : ஏப் 03, 2024 08:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் கணவரிடம் சண்டையிட்டு கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்ற முயன்ற கணவர் உட்பட மூவரும் கிணற்றில் சிக்கினர். தீயணைப்பு துறையினர் 1 மணி நேரத்திற்கும் மேல் போராடி மூவரையும் உயிருடன் மீட்டனர்.

திண்டுக்கல் மரியநாதபுரத்தை சேர்ந்த கட்டட தொழிலாளி செல்லமுத்து,இவரது மனைவி ருக்குமணி. இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்துள்ளது. நேற்றும் செல்லமுத்து, ருக்குமணியிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் விரக்தியடைந்த ருக்குமணி,தன் வீட்டு

பின்புறத்தில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இவரை காப்பாற்றுவதற்காக செல்லமுத்துவும் கிணற்றில் குதித்தார்.

இருவரும் கிணற்றில் உயிருக்கு போராடினர். இதைப்பார்த்த அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் என்பவர் இருவரையும் காப்பாற்ற கிணற்றில் குதித்தார். அவரும் மேலே ஏற முடியாமல் கிணற்றில் தவித்தார். ஒரு கட்டத்தில் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் கிணற்றிற்குள் கயிறை போட்டுள்ளனர். மூவரும் கயிறை பிடித்தவாறு உயிருக்கு போராடினர்.

தகவலறிந்த திண்டுக்கல் தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் சிவக்குமார்,தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து 1 மணி நேரத்திற்கும் மேல் போராடி கிணற்றிற்குள் 2 மணி நேரமாக உயிருக்கு போராடிய ருக்குமணி,செல்லமுத்து,பரமசிவத்தை உயிருடன் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us